Saturday, November 27, 2010

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும்
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கேhttp://www.guardian-mobile.com/ செய்யுங்கள் .
இன்றைய தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .நன்றி வணக்கம் !

மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள

 ஹலோ...' என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "மீடியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார். இது அந்தஸ்தின் 
அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்?


மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார் :மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர். உண்மையில் மூளைக்கும், மொபைல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம்.


மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது. அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும்.


மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம். பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.


தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.

மொபைல் தானாக வாழ்த்தனுப்ப........

மொபைல் போன் பயன்பாட்டில் அதிகம் பயன் படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி அனுப்பிப் பெறுவதுதான். சில நிறுவனங்கல் தங்கள் மொபைல் திட்டங் களில் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்ப கட் டணம் வசூலிப்பதில்லை; அல்லது நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். வரை இலவசம் என்று சலுகை தருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பேசுவதற்குப் பதிலாக இன்டர்நெட் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் போல பலர் எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் உரையாடலை மேற்கொள்கின்றனர்.
ஆனாலும் மிகவும் பொறுப்பான வழி யிலும் எஸ்.எம்.எஸ். செய்திகள் பரிமாறப் படுகின்றன. இவற்றில் மிக முக்கியமானது குறிப்பிட்ட நாட்களில் ஒருவருக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதுதான். பிறந்த நாள், திருமணநாள் மற்றும் பண்டிகை நாட்களில் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவது மொபைல் பயன்பாட்டில் இப்போது நடை முறை வழக்கமாகவே மாறிவிட்டது. அதனால் ஒருவரிடமிருந்து ஏன் செய்தி வரவில்லை என அவரின் நண்பர் அல்லது உறவினர் கோபித்துக் கொள்வதும் சகஜமாகிவிட்டது. ஏனென்றால் பண்டிகை நாட்களில் வாழ்த்து சொல்வது நமக்கு எளிதானது. ஆனால் பிறந்த நாட்கள் மற்றும் மணநாட்களை நினைவில் வைத்து வாழ்த்து அனுப்புவது நம்மில் பலருக்கு தடுமாறும் செயலாக அமைந்துவிடுகிறது. மிகவும் உற்றவர்களின் இந்த நாட்கள் கூட மறந்துவிடுகிறது.

மொபைல் போன்களில் ரிமைண்டர் என ஒரு வசதி உள்ளது.இது அந்த அந்த நாட்களில் நமக்கு நினைவு படுத்தும். இருந்தாலும் அந்த ரிமைண்டரைப் பெற்று நம் வேலைகளிடையே வாழ்த்துச் செய்தி அனுப்புவதையும் நாம் மறந்திடக்கூடும். இதற்குப் பதிலாக செட் செய்தால் மொபைல் போன் தானாகவே வாழ்த்துச் செய்தி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு முறை ஒவ்வொருவரின் நாட்கள், அதற்கான செய்திகள் என அனைத்தையும் செட் செய்துவிட்டு இருந்துவிடலாமே!

இந்த வசதியைத் தரும் வகையில் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் புரோகிராமின் பெயர் எஸ்.எம்.எஸ்.டைமர் (SMS Timer). இதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில், நேரத்தில் ஒருவருக்கோ அல்லது பலருக்கு மொத்தமாகவோ ஒரு செய்தியை அனுப்பும்படி செட் செய்திட முடியும். இப்படியே பல செய்திகளை வெவ்வேறு நாட்களில் அனுப்ப முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்திடலாம். இதன் சிறப்பு என்ன வென்றால் இதற்கு இன்டர்பேஸ் எதுவும் தேவையில்லை. மேலும் பயன்படுத்துவதும் எளிது.

இந்த புரோகிராமைப் பதிந்துவிட்டால் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கையில் டெக்ஸ்ட்டுக்கான பாக்ஸ் தரப்படும். செய்தியை டைப் செய்தவுடன் இந்த செய்தியை இப்போது அனுப்பவா? அல்லது அனுப்ப வேண்டிய நேரம் மற்றும் நாளைத் திட்டமிடவா? என்று கேட்கும். உங்கள் விருப்பப்படி ஆப்ஷன் தேர்ந் தெடுக்கலாம். திட்டமிட (Schedule) விரும்பினால் உடனே அதற்கான தேதி நேரம் மற்றும் பெறுபவரின் மொபைல் எண் கேட்டு வாங்கி போனில் பதிவு செய்யப்படும்.

ஒரு எஸ்.எம்.எஸ். செய்தியில் 1600 கேரக்டர்கள் வரை இருக்கலாம். ஒரே நேரத்தில் 1000 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம். செய்தி அனுப்பப்பட்டு விட்டதற்கான டெலிவரி ரிப்போர்ட்டும் உடனே உங்களுக்குக் கிடைக்கும். ஓராண்டுக்கு முன் வரை இதில் செய்திகளை அனுப்ப செட் செய்திடலாம்.

இதனால் வெவ்வேறு நேரத்தில் இயங் கும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் சரியான நேரத்திற்கு மெசேஜ் அனுப்புவது எளிதாகிறது. செட் செய்த மெசேஜ் மற்றும் நாட்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம். அதே போல இந்த அப்ளிகேஷனை நாம் விரும்பாத போது இயங்காமல் நிறுத்தி வைக்கலாம்.

இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை www.getjar.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இதன் லேட்டஸ்ட் பதிப்பு எஸ்.எம். எஸ்.டைமர் 2.0. இது சிரீஸ் 60 உள்ள மொபைல் போன்களில் செயல்படும். இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இலவசமாக முதல் 5 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம். அதன் பின் இதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேறு தனி கட்டணம் இல்லை. இவற்றிற்கு உங்கள் சர்வீஸ் புரவைடர் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்களோ அவ்வளவு மட்டும் தான்.பதிவு பனுள்ளதாக இருந்தால் மறக்காம ஓட்டு போடுவதை மறக்காதிங்கள்..

Friday, November 26, 2010

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும்.Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒருஇயங்குதளம். click here


Wednesday, November 24, 2010

கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க..

தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ&&.

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2.  கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar)  opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள்  கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.

கையடக்க தொலைபேசி வரமா?சாபமா?

இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று மற்றும்,இரண்டு சிம்களுடன் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஜி.எஸ்.எம் மற்றும்,ஒரு சி.டி.எம்.ஏ என மூன்று சிம்களை இயக்கும் போனாக index in5030 வெளிவந்துள்ளது.ஒரு ஐp.எஸ்.எம் சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ சிம் இணைப்பு இயங்கும். இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளும் வசதியை இந்தப் போன் தருகிறது.
4420மொடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம் சிம்களுடன் இயங்குகிறது.இந்தப் போனில் வித்தியாசமான ஒரு வசதியுள்ளது. “இதன்மூலம் இலங்கை ரூபாவில் போலியான ரூபா நோட்டுக்களை கண்டறியலாம்” நெட்வேர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப்படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்றும் அறியலாம்.இப்போன்களில் எப்.எம் ரேடியோ, வீடியோபிளேயர், கமரா, புளுரூத், பெர்சனல் கம்பியுட்டருடன் இணைந்த செயலாக்கம்,  மொடம்,வெப்கொம்,போன்ற வசதிகளுடன் 4ஜி.பி வரை மெமரியை அதிகமாக்கும் வசதியும் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது பாவணையிலுள்ள போன் மாதிரிகளாக நொக்கியா,மோட்ரோலா, ஈடெல், சொனிஎரிக்சன், வோடபோன், சைனா சாம்சாங் போன்றவற்றுடன் நாளுக்கு நாள் சந்தையில் மேலும் புதிய புதிய வகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே யாழ்குடாநாட்டில் பாவனையில் இருக்கும் டயலொக்,  மொபிட்டல், ஹச், என்பவற்றுடன் மிக அண்மையில் எடிசலாட் போன்ற புதிய வலையமைப்பும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி தனியார் தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் தமது போட்டி காரணமாக வாடிக்கையாளரை தம்மிடையே இணைத்துக் கொள்ள கொடுப்பனவுகளை வசதி,பக்கேஜ் வசதியில் 1000நிமிடங்கள் இலவசமாகவும் life time discount என்பன காணப்படுகின்றன.
கையடக்கத் தொலைபேசியின் பிரதான முக்கிய செயற்பாடாகவும் அனைவராலும் விரும்பக்கூடியதாகவும் அமைவது எல்லா நேரமும் எந்த இடத்திற்கும்கொண்டு சென்று பயன்படுத்துவதுடன்,விரைவாக தகவல்களை வழங்கவும்,பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. தறபோது யாழ்ப்பாணத்தில் china தயாரிப்பில் E-tel,Alfa-tel,Figna-tel,Origin போன்ற கைத்தொலைபேசிகள் குறைந்தவிலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மனிதர்களின் ஆறாவது விரலாகவே கையடக்க தொலைபேசி மாறிப்போய்விட்டது. ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல் அலுவலகப் பணிக்கு ஒன்று,குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்களை ஒரே கைத்தொலைபேசியில் பாவிக்கும்போது பெருமளவு நன்மையைத் தருகின்றது.ஆயினும் இதன் மூலம் பொது இடங்களில் பெண்களை படம் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும் மற்றும் Internet மூலம் ஆபாசபடங்களை  download செய்து அதனை ஏனையவர்களுக்கும் Blue tooth மூலமும் பரிமாறிக் கொள்வதால் இளைய சந்ததி மற்றும் மாணவர்கள் தவறான பாதைக்கு இட்டு செல்கிறது. நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களில் இணையத்தள வசதியுடாக ஆபாசப்படங்களை பார்வையிடுவது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.
சீனநாட்டுத் தயாரிப்பு செல்போனில் “வாய்ஸ் சேஞ்சர்” என்ற வசதி பலரின் தூக்கத்தை கெடுப்பதாக மாறியிருக்கின்றது. “வாய்ஸ் சேஞ்சர்” மூலம் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயதுப்பெண், மூதாட்டி, என்ற ஏழுவகை குரல் பிரிவுகள் உண்டு. இதில் ஏதாவது ஒன்றைத் தெரிந்து நாம் பேசும் அல்லது பேசவிரும்பும் நபரைத் தொடர்பு கொண்டு பேசினால் எதிர்முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது. நாம் தேர்ந்தெடுத்த எந்தகுரலோ ஒலிக்கும்.இதன்மூலம் பெருமளவு கொள்ளைச் சம்பவங்கள்,மற்றும் ஏமாற்று வேலைகள் செய்வதற்கும், ஒருவர் நண்பராக பாவணை செய்து நடித்து இன்னொருவரை ஏமாற்றி தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அமைய வழிகோலாக அமைகிறது.
சில தவறிவரும் அழைப்புக்களை இணைத்துக் கொள்வதன் மூலம்தெரியாத நபர்களின் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் தெரியாத நபர்களின் தொடர்புகள்  நீண்டநேரப்பேச்சு, அழைக்கும் இடங்களுக்கு செல்லல் போன்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இதனால் நேரவிரையம், பணவிரையம், வீட்டில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் சண்டை,சச்சரவு, உறவுகளுடன் பிரவுகள் ஏற்படுகின்றது. “ வீதிகளில் நீண்ட நாள் சந்திக்காத நணபர் அல்லது உறவினர் ஒருவரை சந்தித்து கதைத்துக் கொண்டிருக்கும் போது கையடக்கதொலைபேசி ஒரு அழைப்பு வருகின்றது. வந்த கையடக்கதொலைபேசி அழைப்பில் உள்ளவருடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள் அருகில் உள்ளவரைக் கூட மறந்து கதைப்பது” கைத்தொலை பேசி காரணமாக அமைகின்றது.
தற்போது முதியவர்கள்கூட கையடக்கதொலைபேசியை தமக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்துகின்றன.பஸ்லில் பயணம் செய்யும்போது வயோதிபர் ஒருவர் தனது போனை தனது பையில் இருந்து எடுத்து தனது உறவினரின் நம்பரை ஒவ்வொன்றாக மெதுவாக டயல் செய்து தான் குறிப்பிட்ட இடத்திற்கு கிட்ட வந்துவிட்டதாகவும் தன்னை வந்து அழைத்து செல்லவும் என்று கூறி விட்டு போனை வைக்கிறேன். பின் அந்த வயோதிபர் போனை மெதுவாக தனது பையினுள் வைத்தார். தற்போது வாகனங்கள் செலுத்தும் போதும் கையடக்க தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
இதனால் அதிகஅளவு விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக மோட்டார் வாகனம் செலுத்துபவர்கள் தமதுதலைக்கவசத்திற்கு உள்ளே கையடக்க தொலைபேசியை வாகனத்தை செலுத்தியபடி கதைத்துக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டசில காலப்பகுதிக்கு முன் எங்காவது ஒரு சிலரே மொபைல்போன் பாவனையாளராக இருந்தனர்.ஆனால் தற்போது வீட்டிற்கு நான்கு ஐந்து செல்போன் என்பது தற்போதைய நிலமை. தற்போது படிக்கும் மாணவர் முதல் வயதான தாத்தாக்கள் வரை அனைவரது கைகளில் இருப்பதும் செல்போன் தான். ஒருவர் பல செல்போன்களை வைத்திருப்பதால் மக்கள் எண்ணிக்கையை விட செல்போன் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
மாணவர்களிடையே பரவலாக இருக்கும் கருத்து என்னவெனில் செல்போன் பாவனையில் வர முன் note book தரமாட்டேன். வேறு எதுவானலும் தருவேன் ஆனால் தற்போதைய நிலை எதுவானலும் தருவேன் phone மட்டும் தரமாட்டேன் என்ற நிலையாக மாறிவிட்டது. எதை,எங்கு,எப்படி பாவிப்பது என்ற நிலையில் இருந்து விலகிய செயற்பாடாகவே குடாநாட்டு இளைஞர்களின் கையடக்க தொலை பேசி பாவனை அமைந்திருக்கிறது.
“அடையாள அட்டையை மறந்தாலும் எனது கையடக்கத் தொலைபேசியைப் பொக்கற்றில் வைப்பதற்கு மறந்ததில்லை”என்று இளைஞர் ஒருவர் கூறுகின்றார். தொழில்நுட்ப வளர்ச்சி  வரவேற்கதக்கது. ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றது.
ஆங்கிலேயர் காலத்தின் பின் யாழ்ப்பாண நிலை “கந்தபுராண கலாச்சாரமாகக்”காணப்பட்டது.ஆனால் தற்போது அதுமாறி கந்தபுராண கலாச்சாரம் கான்போன்(hand phone)கலச்சாரமாக மாறிவிட்டது.

கொஞ்சம் இருங்க.. புதுசா கையடக்க தொலைபேசி (கைபேசி) வாங்க போறிங்களா..?



முதல் முறையாக மலரில் தொழில் நுட்பம் பதிவு. தொழில் நுட்ப பதிவாளர்களின் கோட் பாதர் பிகேபியின் வழியில்.. தொழில் நுட்பம் என்பது கடல் போன்றது அதில் விழும் ஒரு மழைத்துளியாக என் பதிவும் இருக்கட்டுமே ..
“மேலும் படிக்க”



கையடக்க தொலைபேசி இது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக உள்ளது. அப்படி இருக்கும் பொழுது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒருகடையில போய் கைபேசி வாங்கமுடியுமா? ஏன் ஒரு துணைவியை தேடும் ஒரு நபரே யாதகம்,சாஸ்திரம் என்று இருக்கும் பொழுது மனைவியை விட நெருக்கமாக இருக்கும் கைபேசியை சாதாரணமாக வாங்கி விட முடியுமா என்ன.. அதற்காகத்தான் இந்த இணையத்தளம். புதுப் புது கைபேசிகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றது எல்லா வகை கைபேசிகளும் ஒரே தளத்தில் அதன் சிறப்புகள், பவனையாளர்களின் கருத்துக்கள் என பல பல இந்த பக்கத்துக்கு போய்த்தான் பாருங்களேன்..

click
http://www.gsmarena.com/







பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி வைரஸ் பெருகுவதை தடுக்க

 
பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா! 






நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. 


எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.  அவற்றில் ஒன்று  http://www.freeav.com  என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir.  இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும். 






ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் இன்னுமொன்று இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம்.  ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள  AdAware   பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்

நோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்படி ?


பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை

* பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#
* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.

Number---------Phone serial no
1 ----------------------x

2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x

7th------ --------------?

8th------- -------------?
9 -------- ------ -------x
10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x

  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 03 என்றால் கொரியா ஓகே ரகம்

இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

உங்கள் நண்பரின் இன் கை தொலைபேசியை SMS மூலம் Restart செய்யலாம்.


79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து (அதாவது ''''' என்று 79 தடவை ) உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும்.

இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும்.
NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.

நம்ம PC ல virus இருக்கா இல்லையா ?

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.


இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.

உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.

முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.



கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)
Aladdin (eSafe)
ALWIL (Avast! Antivirus)
Authentium (Command Antivirus)
Avira (AntiVir)
Bit9 (FileAdvisor)
Cat Computer Services (Quick Heal)
ClamAV (ClamAV)
CA Inc. (Vet)
Doctor Web, Ltd. (DrWeb)
Eset Software (ESET NOD32)
ewido networks (ewido anti-malware)
Fortinet (Fortinet)
FRISK Software (F-Prot)
F-Secure (F-Secure)
AVG Technologies (AVG)
Hacksoft (The Hacker)
Ikarus Software (Ikarus)
Kaspersky Lab (AVP)
McAfee (VirusScan)
Microsoft (Malware Protection)
Norman (Norman Antivirus)
Panda Security (Panda Platinum)
Prevx (Prevx1)
Rising Antivirus (Rising)
Secure Computing (Webwasher)
Softwin (BitDefender)
Sophos (SAV)
Sunbelt Software (Antivirus)
Symantec (Norton Antivirus)
VirusBlokAda (VBA32)
VirusBuster (VirusBuster)

முகவரி: http://www.virustotal.com/

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)


 

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

 




1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனை இங்கு பெறலாம்.அத்துடன் எனக்கு ஓட்டுப்போட்டு என்னை உயர்த்தலாம்...

Saturday, November 13, 2010

கையடக்கத்தொலைபேசிகளில் இணையவானொலி-இலவச மென்பொருட்கள்.............

 

கையடக்கத்தொலைபேசிகளில் இணையப்பாவனை என்பது இன்றும் அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க தொலைபேசிகளில் பண்பலை வாயிலான வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள். இணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.

அத்தகையதொரு மென்பொருட்கள் தான்  iRadio மற்றும் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.

iRadio என்னும் மென்பொருளில் 700 க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் உள்ளன. இந்த மென்பொருளில் தமிழ் மொழியிலான பல இணைய வானொலிகளும் இடம்பிடித்துல்லைமை மிகவும் சிறப்பானதொரு விடயம்.

iRadio என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான மென்பொருள் சுட்டி:
கணணி வழியிலான சுட்டி: iRadio
கையடக்கத்தொலைபேசி  வழியிலான சுட்டி: m.getjar.com
                                                                      குறியீடு: 083548


VirtualRadio  என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.
மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டி: VirtualRadio
கையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com
                                                                     குறியீடு:084278